பிரியாணி’ ஷ
இயக்குனர் வெங்கட்பிரபு தற்போது ’பிரியாணி’ படத்தை இயக்கிவருகிறார். இதில் கார்த்தி ஹீரோவாக நடிக்கிறார். இந்நிலையில் இப்போது பிரேம்ஜியை வைத்து மட்டும் படத்தை எடுத்து வருகிறாராம். ஏன் என்று விசாரித்தால், கார்த்தி தனது கால்ஷீட்டை தற்போது ராஜேஷ் இயக்கும் ’ஆல் இன் அழகு ராஜா’ படத்திற்கு கொடுத்துவிட்டாராம். இது குறித்து கேட்ட போது, வெங்கட் பிரபு தான் எடுக்கும் படங்களில் தன் தம்பியான பிரேம்ஜிக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறாராம். இதனால் கார்த்தி, ஹீரோவாகிய தனக்கே முக்கியத்துவம் இல்லையென்றால் எப்படி என புலம்பியிருக்கிறார்.